Monday 17 August 2015

சிவவாசகம்




மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தைப் படிக்கும் போதெல்லாம், கண்ணீர் பெருகும். திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன். அதன் தாக்கம், அதுபோல எழுத முயற்சித்தால் என்ன என தோன்றியது. அதன் விளைவுதான் கீழே உள்ள பாடல். அட..எழுதுனது நான்தாங்க..

ஆலயந்தொறும் உனைத்தேடி
ஓடுகின்றிலேன் அருள் நிறையுன்

அடியார்தம் கூட்டத்துள்
கூடுகின்றிலேன் உன்னாமம்

முப்போதும் செந்தமிழால்
பாடுகின்றிலேன் நாட்காலே

நறுமலர்க் கொய்துனக்கு
சூடுகின்றிலேன் தேகம்முழுதும்

ஏகன் உனக்காக்கி உள்ளம்
ஆடுகின்றிலேன் அத்தா

எனையாண்டாய் இனியேனும்
எப்போதும் தப்பாது உன்நாமம்
தரித்திடுமோ என் நாவும்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_