அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வணிக மரபில் வந்த ஐந்து பேர் பற்றி ஒரு நூல் வெளியிட்டேன். அதற்கு “அறுபத்து மூவருள் ஐவர்” என்று தலைப்பிட்டேன். அதைப்படித்த ஒரு நண்பர், “அறுபத்து மூவரில் ஐவர்” என்று இருந்தால் படிக்க எளிதாக இருக்குமே என்றார்.
அவர் சொன்னபடி எழுதினால் அது இலக்கணப்பிழை ஆகிவிடும்.
சென்னையில் வசிக்கிறான், கடையில் விற்கிறார்கள்...இந்த தொடர்களில் சென்னையில், கடையில் ஆகியவற்றின் இறுதியில் உள்ள “இல்” வேற்றுமை உருபு. அதாவது ஒரு இடத்தின் பெயரோடு வருகின்ற வேற்றுமை உருபு. அதனால் இதை இடவேற்றுமை உருபு என்பார்கள்.
இட வேற்றுமை உருபை மனிதர்களின் பெயரில் சேர்க்கக் கூடாது. எனவே, “அறுபத்து மூவருள் ஐவர்” என்றே எழுத வேண்டும்.
”இவர்களில் யார் நல்லவர்” என்று எழுதுவது தவறு.. “இவர்களுள் யார் நல்லவர்” என்றுதான் எழுத வேண்டும்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_