Saturday 22 August 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 15




கண்ணதாசனின் ஒற்றெழுத்து ஜாலம்.
===================================
பார்த்தேன்....ரசித்தேன்... 
பக்கத்தில் வரத் துடித்தேன்...
என்ற பாடலில்
மலைத்தேன் இதுவென மலைத்தேன்
என்று சொல்வார் கண்ணதாசன். மலைத்தேன் என்பதை ஒவ்வொரு
இடத்திலும் ஒவ்வொரு பொருளில் கையாள்கிறார்.
“மலைத்தேன்” ( மலையில் கிடைக்கும் தேன்) இதுவென மலைத்தேன். ஆச்சரியப்பட்டு மலைத்துப் போகிறேன் என்று அடுத்து பொருள் கொள்கிறார்.
இந்தப்பாடலில் இன்னொரு வரி.
மலர்த்தேன் என நான் இருந்தேன்
பருவத்தில் மலர்ந்தேன்
என்று சொல்கிறார்.
“மலர்த்தேன் என நான் இருந்தேன்” - மலரில் இருக்கும் தேனாக இருந்தேன். மலருக்குள் தேனாக இருந்தபோதும், மலராமல் இருப்பதால் வண்டு வந்து தேனருந்த முடியாத நிலை போல் இருக்கிறாள்.
”பருவத்தில் மலர்ந்தேன்” பருவம் வந்ததும் மலர்கிறாள். வண்டு வந்து தேனருந்தலாம்.
இங்குதான் கண்ணதாசன் தன் சூட்சமத்தைக் காட்டுகிறார்.
பருவம் எய்தும் முன் “மலர்த்தேன் என நான் இருந்தேன்” என்று சொல்கிறாள். இதில் ”மலர்த்தேன்” என்பதில் வருகின்ற “த்” வல்லின ஒற்று.பருவத்தில் மலர்ந்தேன்.... இதில, “மலர்ந்தேன்” என்பதில் வரும் “ந்” மெல்லினம்.
பருவமடைந்தபிந்தான் பெண்மைக்கு மென்மை கூடுகிறது. பருவம் அடையும் முன் அவள் மென்மையாக இருக்கமாட்டாள் என்பதால், .
“மலர்த்தேன் என்று வல்லின ஒற்றை பயன்படுத்துகிறார். பருவத்தில் மலர்ந்தேன் என்பதில், பருவடைந்ததும் மென்மை கூடுகிறாள் என்பதால் மெல்லின ஒற்றை போடுகிறார். ஆஹா...கவியரசர் அல்லவா?

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_