Saturday 22 August 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 14



கவியரசர் கண்ணதாசனின் நுட்பம்.
=================================

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

என்று ஒரு பாடலில் வரும்.

தமிழ் இலக்கணத்தில் ஒரு எழுத்து மறைவதை மெலிதல் என்பார்கள். அதாவது வல்லின ஒற்று மறையுமானால் வலி மெலியும் என்றும், இடையின ஒற்று மறைதலை இடை மெலிதல் என்றும் சொல்வார்கள்.

இந்தப்பாடல் வரிகளை மீண்டும் படியுங்கள்.

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

இதில் “பார்வை” என்பதில் இடையின ஒற்று “ர்” உள்ளது. ர் மறைந்தால்
”பார்வை” என்பது “பாவை” ஆகும்.
அவன் பார்க்கிறான். அதனால் அவளுக்கு காதல் மிகுந்து காமமும் மிகுகிறது. அதன் காரணமாக இடை மெலிகிறாள். என்பதுதான் பாடல் பொருள். அதற்குள்ளும், “பார்வை” என்ற சொல், இடை மெலிந்தால் “பாவை” என்று எவ்வளவு நுட்பமாக சுவை கூட்டுகிறார் பாருங்கள் கவியரசர்.



No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_