Friday 10 April 2015

சந்திப்பே பிழையென்றால்...

தமிழாசிரியராய் இருக்கத்
தகுதியே இல்லை
உன் தந்தைக்கு...

”என்னுயிர் கதலிக்கு”
என்று நான்
எழுதியதைப் படித்துவிட்டு
சந்திப் பிழை என்று
சொல்லியிருந்தால்
சம்மதித்திருப்பேன்.

நம்
சந்திப்பே
பிழை என்கிறாரே......

தொல்காபியம் படித்த
உன் தந்தையைக் கேட்டுப் பார்
”உடன் போக்கு” என்றால் என்னவென்று.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_