Friday, 10 April 2015

என்னுக்குள் எனைக்காட்டும் கருவிழியே

என்
கண்ணுக்குள் அமர்ந்த
கவிதையே

என்னுக்குள் எனைக்காட்டும்
கருவிழியே

என்
மனத்துக்குள் ஒலிக்கின்ற
மணியே.

எதைப் பார்க்கின்றாய்?
ஏன் இங்கு வைத்தேனென்றா?

பொன்னுக்குள் வைத்தாலும்
போதாது என்றே
கண்ணுக்குள் வைத்தேன்
கருவிழியே உன்னை.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_