Wednesday 11 February 2015

குறும்பு-19



அதே பேராசிரியர்தான்.
அதேன்னாவா? என்னை வாழ்த்தும் அவர்தான். வகுப்பில் ஒரு நாள் ஒரு கட்டுரையை வாய்விட்டு சத்தமாகப் படிக்கச் சொன்னார். ‘அவன் செய்கின்றான்’ என்று இருந்ததை ‘அவன் செய்கிறான்’ என்று படித்துவிட்டேன். ‘நிறுத்து’ என்றார்.நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். ’அதுல என்ன இருக்கு’ எனக் கேட்டார். அவன் செய்கின்றான்’ என்று இருக்குங்க ஐயா என்றேன். நீ என்ன படிச்ச என்று கேட்டார். மாற்றிப் படித்ததால் பொருள் மாறவில்லையே அதனால் என்ன என்றேன். அதில் இருப்பதை ஒழுங்கா படி என்றார். படித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் அவர், ‘ கண்ணிலோ வாயிலோ தூசி பட்டால் துப்புறோம் இல்லையா?” என்று கேட்டார். ;நிறுத்துங்க ஐயா’ என்றேன். என்ன என்று கேட்டார். வாயில் தூசி பட்டால் துப்பலாம். கண்ணில் தூசி பட்டால் எப்படி துப்ப முடியும்? என்று கேட்டேன்.’அதெல்லாம் நீயே சரியா பொருள் கொள்ளணும் என்றார். நீங்க தப்பா சொல்லுவிங்க...நான் அதை சரியா புரிஞ்சுக்கணுமா? என்று கேட்டேன். பிறகென்ன? வழக்கம் போல வாழ்த்துதான்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_