Wednesday 11 February 2015

குறும்பு-20

அன்போடு என்னை வாழ்த்தும் அதே பேராசிரியர். பெரியோர் சொல் கேட்பது பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது
‘ஆசிரியர் சொல்வதை மணவன் கேட்க வேண்டும்’ என்றார்.

ஆசிரியர் சொல்வதை மாணவன் ஏன் கேட்க வேண்டும் ஐயா?’ என்று கேட்டேன்.
‘மாணவனைவிட ஆசிரியர் அறிவாளி. அதனாலதான்’ என்றார்.
‘அப்படியாங்க ஐயா’ என்றேன.
‘வேற எப்படி?’ என்று கேட்டார்.
‘டெலிபோனை கண்டு பிடிச்சது யாருங்க ஐயா?’ னு கேட்டேன்.
‘அதுக்கு இப்ப என்ன?’ என்று கேட்டார்.
‘சும்மா சொல்லுங்க ஐயா’ என்றேன்.
’கிரஹாம் பெல்” என்றார்.
‘ஆசிரியர்தான் அறிவாளின்னா...கிரஹாம் பெல்லோட ஆசிரியர் ஏன் டெலிப்பொனை கண்டுபிடிக்கலை?’ ன்னு கேட்டேன்.
அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்? வகுப்பு கேன்சல். டென்ஷனாகி போயிட்டாரு .....


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_