மனம் சர்புடைய காதலையும் பாடினார்.
துறவின் தூய்மையைச் சொன்னவர்
இல்லற உறவின் இன்பத்தையும் சொன்னார்.
மன்னனின் நெறியை உரைத்தவர்
மக்களின் பணியையும் உரைத்தார்.
அறிவின் ஆற்றலை எழுதியவர் - காதலில்
பிரிவின் தூற்றலையும் எழுதினார்.
பெண்ணின் அழகை வர்ணித்தவர்
பெருங்குண பெருமையையும் வர்ணித்தார்.
ஊடல் வகை நமக்குஉணர்த்தியவர்
கூடலிலும் நம்மை கொள்ளை கொண்டார்.
அறத்தின் திறம் எடுத்துரைத்தவர்
மறத்தின் மாண்பையும் உரைத்தார்.
எக்காலத்துக்கும்
முக்காலத்துக்கும்
முப்பாலில் கருத்துகளை
அதிகாரமாய்
அழகாய்
ஆணித்தரமாய்
அருளிச் சென்றவர்
ஐயன் திருவள்ளூவர்.
ஐயனின் குறளை
அனைவரும் அறிய
அழகாய் புரிய
கனித் தமிழில்
கவிநடையில்
எழுத எனக்கு அருளினாள்
என் தமிழன்னை.
ஆயிரத்து முன்னூற்று முப்பது...
அன்னாந்து பார்க்க வைக்கிறது..
ஐயன் சொல்லும் பொருள் மாறாமல்
அவன் உணர்த்தும் சுவை குறையாமல்
அத்தனையும் வரவேண்டும்
அடிகள் சிலவற்றுள்....
அன்னை அருளால்
அடியெடுத்து வைத்தேன்....
இருநூறு படிகள் ஏறிவிட்டேன்
இன்னும் இருக்கிறது
ஈரைநூறுக்குமேல்....
ஐய்யன் வள்ளுவரும்
அன்னை தமிழ்த்தாயும்
அருள் புரிந்து துணை நிற்க....
அகரம் தொடங்கியவன்
சிகரம் தொடுவேன்.......
இருக்கின்ற தலைமுறைக்கும் - வர
இருக்கின்ற தலைமுறைக்கும்
இனிதாய் எளிதாய் தருவேன்
வள்ளுவன் வழங்கிய குறளை.
வாழ்த்துங்கள் நட்புகளே....
வருங்காலம் வளம் பெறட்டும்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_