Wednesday 11 February 2015

குறும்பு-15



அந்தப் பேராசிரியர் சிலப்பதிகாரம் நடத்தினார். இண்டர்னல் மார்க் போடுவதற்காக 3 மணி நேரத் தேர்வு. ஒரே கேள்வி. ’சிலப்பதிகாரத்தில் உனக்குத் தெரிந்தவற்றை எழுது’ இதுதான் கேள்வி. இதற்கு அவர் சொன்ன விளக்கம், ‘நான் பத்து கேள்வி கேட்டன்னா, சிலதுக்கு உனக்கு விடை தெரியாமல் இருக்கலாம். உனக்கு என்ன தெரியாதுன்னு தெரிஞ்சுக்கவா தேர்வு? உனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்னு தெரியனும்னா இப்படித்தான் கேள்வி கேட்கணும்’ என்றார். நல்ல விஷயம் என அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.
தேர்வு முடிந்து, இண்டர்னல் மார்க் போட்ட பிறகு அவரை சந்தித்த போது அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இதோ:

’உனக்கு எவ்வளவு மதிப்பெண் போட்டிருக்கேன் பார்த்தியா?’

‘பார்த்தேங்கய்யா...40க்கு 39 போட்டிருக்கிங்க’

‘ஏன் போட்டேன் சொல்லு’

‘நல்லா எழுதினேன் போட்டிங்க’

‘நல்லா எழுதினா நல்ல மார்க் போட்ட்டுவாங்களா”

‘நேர்மையானவங்க போடுவாங்க’

‘ஏன் போட்டிங்கன்னு கேட்க மாட்டியா நீ?”

‘ஏன் போட்டிங்கன்னு கேட்கணும் உங்களுக்கு. அவ்வளவுதானே...சொல்லுங்க. ஏன் போட்டிங்க்?”

‘ இப்ப நீ அடம் பண்ணலாம். பத்து வருஷம் கழிச்சு, என்ன பார்க்கும்பொது, தெரியாமல் பேசிட்டேன். மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டின்னா..உன் பாவம் கழிஞ்சுடும். மதிப்பெண்ணை நான் குறைச்சு போட்டுட்டேன்னா, அந்த பாவத்தை திரும்ப கழிக்கவே முடியாது. அதனாலதான் போட்டேன்’

‘ஆக.....நேர்மைக்காக மதிப்பெண் போடல....உங்களுக்கு பாவம் சேர்ந்திட கூடாதுங்கிற சுய நலத்துல போட்டிங்கன்னு சொல்லுங்க’

அவருக்கு கோபம் கொப்பளிக்கிறது. ஆனாலும் ஒன்றும் பேசமுடியவில்லை.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_