மாளாது செந்நெல் என
ஆனை கட்டி போரடித்த
அழகான தமிழ் நிலத்தில்
பொங்கி வரும் புதுப் புனலாய்..- மணம்
தங்கி வரும் புதுமலராய்..வரம்
வாங்கி வரும் வசந்தமாய்
பொங்கட்டும் இன்பம் - என்றும்
தங்கட்டும் வளமெலாம்
நலம் சேர்ந்து வளம் சூழ
பொங்கட்டும் மகிழ்ச்சியென
வாழ்த்துகிறேன் பொங்கல் திருநாளில்...
தாய்மொழியாம் தமிழ் போல் வாழ்க வாழ்க...
நட்புகள் அனைவருக்கும் என்
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்..
பொங்குக பொங்கல்...
பொங்குக மகிழ்ச்சி
தமிழர் திருநாள் வாழ்த்துகள்..
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_