Sunday 11 January 2015

தமிழ் விளையாட்டு -18



வயதான புலவர் ஒருவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் பால்கூட குடிக்க முடியவில்லை.அவருடைய மகள், ஒரு துணியை பாலில் நனைத்து, அதைப் பிழிந்து அவர் வாயில் பாலை விட்டாள். அந்தத் துணி அழுக்காக இருந்தது. அதை சகிக்க முடியாத புலவர், முகம் சுளித்தார்.

“ஏன் அப்பா....பால் கசக்கிறதா?” என்று கேட்டாள் மகள்.
அதற்கு புலவர் சொன்ன பதில்....

“பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை”
=============================================

அடடா..தமிழ்ச் சுவையே சுவை..

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_