Wednesday 7 January 2015

தமிழ் விளையாட்டு-16



கவியரசர் கண்ணதாசன் ஒருநாள், திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போன் செய்து குரலை மாற்றிப் பேசி ஒரு தகவல் சொன்னார். போனில் அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’

என்பதுதான். பல சினிமா பிரபலங்களும் அலறியடித்துக் கொண்டு கண்ணதாசன் வீட்டுக்குச் சென்றனர். அவர் அங்கே நாற்காலியில் ஜாலியாக உட்கார்ந்திருந்தார். சென்றவர்கள் ஒன்றும் கேட்க முடியாமல், சும்மா பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கண்ணtதாசன் சொன்னார்,

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று நானேதான் உங்களிடம் சொன்னேன். குரலை மாற்றிப் பேசினேன் என்றார்.
‘ஏன் இப்படி சொன்னிங்க? எவ்வளவு பய்ந்துட்டோம்’ என்று வந்தவர்கள் கேட்டனர்.
அதற்கு கண்ணதாசன், ‘ இருக்கும்போதே செத்துவிட்டதாக வதந்தி பரவினால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’’ என்றார்.
அதிக நாள் வாழவேண்டும் என ஆசைப்பட்டார் கண்ணதாசன். சே...56 ஒரு வயசா?


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_