Monday 5 January 2015

எடுத்தது எங்கே-16



ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் கவிதை ஒன்று. அதன் தமிழாக்கம் இதோ:

ஊற்று கலக்கும் ஆற்றோடு

ஆறு கலக்கும் கடலோடு

காற்று கலக்கும் காற்றோடு

கலையா இன்ப உணர்வோடு

தெய்வீக விதியின் துணையோடு

ஒவ்வொரு பொருளும் இணையோடு

ஒன்றாய்க்கலக்கும் உறவோடு – நான்

கலப்பது தவறோ உன்னோடு?

காதலனைப் பார்த்துக் காதலி இப்படி கேட்-பதாக எழுதியிருப்பார் ஷெல்லி. இந்தக் கவிதை-யை, தமிழ்நாட்டில் வழங்கும் ஒரு நாட்டுப்-புறப்-பாடலோடு ஒப்பிடுவார் கவிக்கோ அப்துல் ரகுமான்:

கல்லோட கல்லுரச

கடலுத்தண்ணி மீனுரச

உன்னோடு நானுரச

உலகம் பொறுக்கலியே!

என்ற நாட்டுப்புறப் பாடலை ஷெல்லியின் கவிதையோடு ஒப்பிடும் கவிஞர் அப்துல் ரகுமான்,

ஷெல்லியைப் போலவே “ஒரு நாட்-டுப்-புற பெண் வாதாடு-கிறாள்... ஷெல்லி-யின் வாதங்-களைவிட இந்தப் பெண்ணின் வாதம் பலமானது. கல்லோடு கல் உர-சி-னால்தான் தீப்பொறி பிறக்கும். கடல் நீரோடு மீன் உரசினால்தான் அது உயிர் வாழ முடியும் இவற்றை-யெல்லாஅனுமதிக்கும் உலகம் தங்களை மட்டும் தடுப்-பானேன் என்று கேட்கிறாள். நியாயம்-தானே..!” இப்படி ‘அவளுக்கு நிலா என்று பெயர்’ என்ற ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் அப்துல் ரகுமான்.

இந்த நாட்டுப்புறப் பாடலை,

அப்-துல் ரகுமான் மொழியில் சொல்வ-தானால், ஷெல்-லி-யை வென்ற தமிழ்ப் பெண்ணின் பாடலை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்-தில் பயன்-படுத்தியுள்ளார் ஒரு கவிஞர்.

அந்தப் பாடல்...

பெண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ...

பூவா காத்தா உரச

ஆண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ....

பூவா... காத்தா.... உரச

இந்தப் பாடலை நாட்டுப் புறப் பாடலோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்

கல்லோட கல்லுரச

கடலுத்தண்ணி மீனுரச

உன்னோடு நானுரச

என்பதையே

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ...

என உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றை அப்படியேயும் உருமாற்றம் செய்தும் திரையுலகுக்கு கொடுத்துள்ளார் வைரமுத்து.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து பெரும் புகழ் பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை. அதில் ஒரு பாடல்.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்

என்று தொடங்கும். மிகவும் பிரபல-மான பாடல் இது. ஒரு நாள், 1981ல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தமிழ்ப் பெண்களின் விளையாட்டுகளைப் பற்றி விளக்கும் கட்டுரை ஒன்று. அந்தக் கட்டுரையில் பெண்கள் கும்மியடிக்கும் படத்-தைப் போட்டு அதன் கீழ்’

ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்

என்று அச்சிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி எனக்கு. இது வைரமுத்து எழுதிய திரைப்-பாடலா-யிற்றே. இதில் எப்படி இடம் பெற்றது என்று.காரணம், அலைகள் ஓய்வதில்லை படமும் பாடலும் வெளிவரும் முன்பே உலகத்தமிழ் மாநாட்டு மலர் வெளி வந்திருந்தது. ஆராய்ந்து பார்த்-தில், ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்-பது நாட்டுப்புறப் பாடல் என தெரிய வந்தது.

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியை வெல்லும் நமது தமிழ்ப் பெண்களின் பாடல்களை எப்படி-யெல்லாம் திரைப் படத்தில் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். யாரும் உரிமை கொண்டாட முடி-யா-த-வை நாட்டுப்புறப் பாடல்கள். அதனால் அதை யார்வேண்டுமானாலும் எடுத்துக்-கொள்-ள-லாம். கேட்க ஆள் இல்லை என்றால், எழுதியது நானே-தான் என்றும் சொல்லிக்கொள்ளலாம். யார் கேட்கப் போகிறார்கள்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் பாடல்,

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை

மாறிப் போகுமோன்னு

தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்

...

பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற எப்ப வந்து தரப் போற

...

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

...

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே

...

பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே

சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே

என்ற பாடலும் நாட்டுப்புறப் பாடல்தான். நன்றாக இருக்கிறதல்லவா? யாருக்கும் தெரி-யா-மல் இருப்பதை ஊருக்கு சொல்லலாமே என்று எடுத்-துக்கொடுத்திருக்கிறார் கவிப் பேரரசு

வைர-முத்து.

- எடுத்தது வரும்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_