Sunday, 28 December 2014

பெய்யெனப் பெய்யும் மழை


தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் முதல் பலரும் சொன்ன பொருள்.

தெய்வத்தை வணங்காமல், கணவனையே தெய்வமாக வணங்கும் பத்திணிப் பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

என்பதுதான்.

இதெல்லாம் பழங்காலத்தில் பத்திணிப் பெண்கள் மீது இருந்த மதிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டவை.

இப்போது சொல்லப்படும் பொருள் இதுதான்.....

பக்தி என்று சொல்லும் அளவுக்கு கணவன் மீது அதீத அன்பு கொண்ட பெண் எதற்கு ஒப்பாவாள் என்றால், நமக்குத் தேவை ஏற்படும்போது, பெய் என்று சொன்னால் பெய்கின்ற மழைக்கு ஒப்பானவள். பெய் என்றதும் பெய்கின்ற மழை எப்படி பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளதோ அதே போல அந்தப் பெண்ணும் பயனுள்ளவளாகவும் மகிழ்ச்சி தருபவளாகவும் இருப்பாள்.

ஆனால் ஒன்று.....பெய் என்றதும் என்றாவது மழை பெய்ததுண்டா? அப்படி ஒரு மழை தரும் பயனையும் மகிழ்ச்சியையும் அனுபவிச்சிருக்கோமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_