Tuesday 6 January 2015

குறும்பு-14

அதே பேராசிரியார்...அதாங்க அன்பா வாழ்த்துவாரே அவரேதான்... அந்தாதி பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்தாதின்னா என்னன்னு சொல்லிடுறேன்.அந்தம் என்றால் முடிவு. ஆதி என்றால் தொடக்கம். அதாவது, முடிவை முதலாகக கொண்டு தொடங்க்குவது அந்தாதி.ஒரு வரியோ அல்லது பாடலோ எந்த சொல்லில் முடிகிறதோ அந்த சொல்லை தொடக்கமாகக் கொண்டு அடுத்த வரியோ அல்லது அடுத்த பாடலோ தொடங்கும். இதைத்தான் அந்தாதி என்று சொல்வார்கள்.
இப்படி அந்தாதி பற்றி விளக்கிய பேராசிரியர், என்னைப் பார்த்து அந்தாதிக்கு ஒரு உதாரணம் சொல்லு என்றார். நான் உடனே

என்னடி மீனாட்சி
மீனாட்சிக் குங்குமம்
குங்குமம் கதை சொல்கிறது
சொல்லத்தான் நினைக்கிறேன்
நினைத்தாலே இனிக்கும்
இனிக்கும் இளமை
இளமை ஊஞ்சலாடுகிறது

என்று சினிமா பெயர்களை அந்தாதியில் சொன்னேன். அவ்வளவுதான். அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லணுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


1 comment:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_