ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் புதுக்கவிதை உச்சத்தில் இருந்தது. 1983ல் நான் மாணவனாக இருந்தபோது, ‘இருட்டுச் சுவடு’ என்ற புதுக்கவிதை நுõலை வெளியிட்டேன். எனது நண்பர் மருதுõர் அரங்கராசன் ஒரு இலக்கணப் புலவர். எனது புதுக்கவிதை நுõலைப் படித்துவிட்டு அவருக்கும் புதுக்கவிதை எழுதும் ஆசை பிறந்தது. நிறைய எழுதி எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். அதில் ஒரு கவிதை,
பிரம்மனை
கஞ்சன் என்றுதான்
நினைத்தேன்
உன் இடையைப்
பார்த்தபோது.
பிறகுதான் தெரிந்தது
அவன்
வள்ளலாகவும் இருக்கிறான்
என்று எழுதியிருந்தார். அதைப் படித்த நான்,
‘பிறகுதான் தெரிந்தது’
என்று இருந்தால் சட்டென்று புரியாது என்று சொல்லி,
‘சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது’
என்று மாற்றினேன். கவிதைகளை தொகுத்து ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் நுõலாக வெளியிட்டார் அரங்கராசன்.
அந்த நுõலுக்கு கவிஞர் மு. மேத்தாவிடம் அணிந்துரை வாங்கினார். மேத்தா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘கவிதைக் கன்னி இவருக்கு கடைக் கண் காட்ட மறுக்கிறாள்’ என்று அணிந்துரையில் குறிப்பிட்டார். நுõல் வெளியானதும், உவமைக் கவிஞர் சுரதாவிடம் கவிதை நுõலைக் கொடுத்தோம். மேத்தா எழுதியதைப் படித்த சுரதா, “நீ இலக்கணப்புலவன்; அவரிடம் அணிந்துரை வாங்கிதான் நீ விளம்பரம் தேடணுமா? பல்லுக்கு ஏன் வெள்ளை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.
இந்த நுõலில் இடம் பெற்ற ஒரு கவிதையை, தான் மிகவும் ரசித்ததாக ஒரு வார இதழில் எழுதினார் வைரமுத்து. அவர் எழுதியது இதுதான்...
“இன்னும் ஒரு கவிதை. அங்க வர்ணனையைக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச் சொல்லியிக்கிறான் என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்துவிட்டேன்.
நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.
நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.
தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.
பிறகு சொல்கிறது:
பிரம்மனை கஞ்சன் என்றுதான்
நினைத்தேன்
உன் இடையைப் பார்த்தபோது
சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது
அவன்
வள்ளலாகவும் இருக்கிறான்
இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளமாக புதுக்கவிதை விளங்குகிறது.
இவ்வாறு வைரமுத்து எழுதியது அவருடைய ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ நுõலில்(எட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, பக்கம் 20) இப்போதும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கவிதையைத்தான் அப்படியே எடுத்து, ஜீன்ஸ் படத்தில் வரும் ‘அன்பே...அன்பே...கொல்லாதே’ பாட்டில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்த வரிகள் இதோ....
பெண்ணே உனது மெல்லிடைப் பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றிப்போனேன்
ஆஹா அவனே வள்ளலடி!
படித்து வியந்த கவிதையை சிலாகித்து எழுதிவிட்டு, அதை அப்படியே எடுத்து திரைப்பாடலுக்கும் பயன்படுத்திக்கொண்ட வைரமுத்து, அந்த கவிதையை எழுதியவர் மருதுõர் அரங்கராசன் என்பதைக்கூட தனது நுõலில் குறிப்பிடவில்லை.
கண்ணதாசனின் ரசிகை ஒருவர் ஒரு பாடல் எழுதி கண்ணதாசனுக்கு அனுப்பினார். நாட்டுப்புறப் பாடல் வரியுடன் தொடங்கிய அந்தப் பாடல் கண்ணதாசனுக்கு பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் முள்ளும் மலரும் படத்துக்கு பாடல் கேட்டார் இயக்குனர் மகேந்திரன். ரசிகை அனுப்பியிருந்த பாடல், மகேந்திரன் சொன்ன கதைச் சூழலுக்கு பொருத்தமாக இருந்தது.
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
என்ற பாடல்தான் அது. கண்ணதாசன் உடனே அந்த ரசிகைக்கு கடிதம் எழுதினார். அவர் அனுப்பிய பாடலை திரைப்படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா? என்று அனுமதி கேட்டாராம். ரசிகையும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தெரிவித்தாராம். அதன் பிறகே அந்தப் பாடலில் சிறு மாற்றம் செய்து இயக்குனருக்கு கண்ணதாசன் அனுப்பினார் என்று திரையுலக நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் கூறினார். கண்ணதாசனின் நேர்மை கேட்டு வியந்தேன்.
(எடுத்தது வரும்)
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_