Friday 19 December 2014

குறும்பு-10

விருத்தாசலம் அரசுக் கலைக் கல்லூரியில் நான் இளங்கலை தமிழ் இலக்கியம்( தமிழ்ல சொன்னா,B.A. Tamil Literature) படித்துக் கொண்டிருந்தபோதுதான் அன்னக் கிளி படம் வெளியானது.
அதில் ஒரு திரையரங்கு உரிமையாளராக வருவார் தேங்காய் சீனிவாசன். கூலிங் கிளாஸ் போட்டிருப்பார். அவருக்கு ஒரு அல்லகை இருப்பான் (கவுண்டமணி என்று நினைவு) படம் பார்க்க வரும் பெண்களை நோட்டமிடுவார் தேங்காய் சீனிவாசன். யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால், அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் கூலிங் கிளாசை கழற்றுவார். அந்தப் பெண் மீது அவர் ஆசை படுகிறார் என்பதற்கு சிக்னல் அது. பிறகு ஆக வேண்டிய ஏற்பாடுகளை அல்லகை செய்வான். ஒரு நாள் ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார் தேங்காய் சீனிவாசன். அல்லகை உடனே ‘முதலாளி கண்ணாடிய கழற்றிடாதிங்க’ என்று சொல்வான். ‘ஏண்டா?’ எனக் கேட்பார் தேங்காய். ‘அது என் சம்சாரம்’ என்பான் அல்லகை.

சரி விஷ்யத்துக்கு வரேன்...

கல்லூரியில் தமிழ்த்துறைக்கு என தனி நூலகம் உண்டு. அதற்கு ஒரு பேராசிரியர்தான் பொறுப்பு. ஒருநாள் அதில் உள்ள புத்தகங்களை எல்லாம் ரேக்கில் அடுக்கி வைக்க எங்களை அழைத்தார் அந்தப் பேராசிரியர். நாங்களும் போய் அடுக்கிக் கொண்டிருந்தோம். என் வகுப்பு மாணவி ஒருவார் புத்தகத்தை எடுத்து, ரேக்கின் மேல் தட்டில் வைத்துக்கொண்டிருந்தார். அவருக்கு பக்கவாட்டில் சற்று தள்ளி அமர்ந்து, அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியர் சட்டென்று கண்ணாடியை கழற்றினார். அதை பார்த்த நான், ’வாத்தியார் கண்ணாடிய கழற்றிட்டாருடா” என்றேன். எல்லாரும் கொல்லென்று சிரித்துவிட்டோம். என்னபா சிரிக்கிறிங்க? என்று கேட்டார். ஒன்னுமில்ல சார்ன்னு சொல்லிட்டோம். பின்னர் தனியாக அழைத்து, சிரித்ததுக்கு காரணம் கேட்டார் பேராசிரியர். சொன்னேன். அவரும் சிரித்தார்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_