Friday 19 December 2014

குறும்பு-11


விருத்தாசலம் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தபோது, ‘நம்பி அகப்பொருள்’ பாடம் நடத்தினார் ஒரு பேராசிரியர். காதல் இலக்கியம் அது. கொஞ்சம் கசமுசாவாக இருக்கும். அதனால் அவர் பாடம் நடத்த மாட்டார்.
வகுப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு நோட்டை எடுத்துவருவார். சொல்வதை எழுதிக்கிங்க என்று கூறி அந்த நோட்டில் இருப்பதை படிப்பார். ஒரு நாள்கூட நடத்தியதில்லை. ‘இது நாட்டார் பேரன் கொடுத்த நோட்ஸ்’ என்பார்.
இப்படி பாடமே நடத்தமாட்டேங்குறிங்களே என்று ஒரு நாள் கேட்டோம். இந்த பாடத்தை உங்களுக்கு வச்சிருக்கக் கூடாது. இதைப் படிக்கும் அளவுக்கு யூ ஆர் நாட் மெண்டலி மெச்சூர்டு என்றார்.
நோட்ஸ் கொடுப்பதற்கே அவர் (ஒரு மாணவரைக் காட்டி) எண்ணையில் போட்ட அப்பளம் போல துடிக்கிறார். பாடம் நடத்தினால் என்ன ஆவார்? என்று கேட்டார் பேராசிரியர்.
உடனே நான், ‘’ நீங்களே ஒரு மணி நேரத்துல 32 தடவை பெருமூச்சு விடுறிங்க. நாங்க எப்படி சும்மா இருக்க முடியும்னு கேட்டேன்.
ஐயையோ நான் பெருமூச்செல்லாம் விடலிங்க என்றார்.
எண்ணிட்டுதான் சார் சொல்றேன் 32 முறை பெரு மூச்சு விட்டுருக்கிங்க என்றேன்.
அதெல்லாம் இல்லைங்க. அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு என்றார் [பேராசிரியர்.
இதை இன்னொரு பேராசிரியரிடம் நாங்கள் சொன்னபோது அவர் சொன்ன பதில்...

ஹுக்கும்....எங்க விட்டார்?


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_