இரவும் உணவருந்தச் சென்றோம். மூன்று பேரும் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்தோம். மாலையில் சாப்பிட்டுவிட்டதால் எங்கள் இருவரால் அதற்கு மேல் சாப்பிட முடியாது. தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே(ஏற்கனவே பேசி வைத்தபடி) ரகு ராமன் என்னிடம்
”வேற என்ன சாப்பிடுற குமார்?” என்று கேட்டார்.
நான் உடனே
‘ அறிவுள்ளவன் இதுகு மேல சாப்பிட மாட்டான். எனக்கு போதும்’ என்றேன்.
அடுத்து, ‘கோபலன் நீங்க என்ன சாப்பிடுறிங்க?’ என்று கேட்டேன்.
‘எனக்கும் போதும்’ என்று சொல்லிவிட்டார் கோபலன். பில் தொகை குறைந்தது. கோபாலனோ அரை பசியில் ராத்திரி சரியா தூக்கம்கூட வராமல் அவதிப்பட்டார் பாவம்.
அடுத்த நாள் கோபாலன் பணம் கொடுக்கும் முறை. இரவு சாப்பிட போனோம். வழக்கம் போல தோசை ஆர்டர் செய்தோம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே,
”அடுத்தது என்ன ஆர்டர் பண்ணலாம் குமார்?” என்று கேட்டார் ரகுராமன்.
கோபாலன் முந்திக் கொண்டு, ’அறிவுள்ளவன் இதுக்குமேல் சாப்பிட மாட்டான். எனக்குப் போதும்’ என்றார்.
”அறிவுக்கும் சாப்பிடுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இன்னொரு சப்பாத்தி சாப்பிடுவோம் ரகுராமன்” என்றேன் நான்.
‘நீங்கதானே நேற்று சொன்னிங்க” என்று கேட்டார் கோபாலன்.
இப்ப நான் கேட்ட மாதிரி நீங்களும் நேற்றே கேட்க வேண்டியதுதானே?”” என்றேன்.
போதும் என்று சொல்லிவிட்டதால் கோபாலன் அன்றும் ஒரு தோசைக்கு மேல் சாப்பிடவில்லை. எங்கள் இருவருக்கும் ஒரே சிரிப்பு.
அறைக்குப் போனதும் உண்மையைச் சொன்னோம்.
அடப்பாவிகளா..நீங்க சொன்னதைக் கேட்டு, நான் அறிவில்லாதவன் ஆகிடுவேனேன்னு ரெண்டு நாளா அரைப் பட்டினியா கிடக்கிறேனே” என்று சொல்லி கோபாலனும் எங்களொடு சேர்ந்து சிரித்தார் .
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_