Saturday, 29 November 2014

கண்ணனே! என் கள்வனே!!



திருமேனி கரியமலை தித்திக்கும்
திருக்கண்ணும் கரமும் திருவடியும்


தினம் மலரும் செந்தாமரை! குழல்
கானம் இசைத்தென்னை கவர்ந்திழுத்த

கள்வனே! நப்பிண்ணை கேள்வனே!
கள்ளூறும் இதழ்சுவைக்கும் குழலாய்

திருச்சங்காய் பிறந்திலனே! உள்ளூறும்
காதலினால் மாலே மனம் இளைத்தேனே

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_