திருமேனி கரியமலை தித்திக்கும்
திருக்கண்ணும் கரமும் திருவடியும்
தினம் மலரும் செந்தாமரை! குழல்
கானம் இசைத்தென்னை கவர்ந்திழுத்த
கள்வனே! நப்பிண்ணை கேள்வனே!
கள்ளூறும் இதழ்சுவைக்கும் குழலாய்
திருச்சங்காய் பிறந்திலனே! உள்ளூறும்
காதலினால் மாலே மனம் இளைத்தேனே
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_