Monday 24 November 2014

குறும்பு-1

நான் பி. ஏ. தமிழ் இலக்கியம் படித்த போது, எங்கள் வகுப்பில் மொத்தமே 9 பேர்தான். அதனால், ஆங்கிலம், தமிழ் வகுப்புகள் எங்களுக்கென்று தனியாக நடக்காது. பி.எஸ்சி. பிசிக்ஸ் மாணவர்களுடன் சேர்த்துவிட்டுவிடுவார்கள்.

ஒரு நாள் அவர்களுக்கு லேப் என்பதால் தமிழ் வகுப்புக்கு வரவில்லை அவர்கள். என்னை எப்போது வாழ்த்தும் பேராசிரியரின் வகுப்பு. நாங்கள் மட்டும் வகுப்புக்கு போனோம். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம், பேராசிரியர் வந்தார். ;ஏன் கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்திருக்கிங்க? எல்லாரும் முன்னுக்கு வாங்க’ என்றார்.

எல்லாரும் முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்தாங்க. நான் மட்டும் மூணாவது பெஞ்சில் உட்கார்ந்தேன். பேராசிரியர், மட்டம்தட்ட வாய்ப்புகிடைத்ததே என்று.’என்னைப் பார்த்து, ‘உனக்கு மட்டும் முன்னுக்கு வருவதே பிடிக்காதே’ என்றார்.
நான் எழுந்து, ‘படிப்படியா முன்னுக்கு வரனுங்க ஐயா..அதுதான் நிலைக்கும்’ என்றேன்.

கடுப்பாகிப் போன அவர், ‘சரி..சரி..நீ அறிவாளிதான். உட்கார்’ என்றார். நான் உடகாராமல், ‘அதை நீங்க சொல்லக் கூடாது” என்றேன்.
‘வேற யார் சொல்லணும்?’ என்று கேட்டார்.
‘இன்னொரு அறிவாளிதான் சொல்லணும்” என்றேன்.

அவருக்கு வந்த கோபத்தில் வகுப்பை கேன்சல் செய்துவிட்டு போய்விட்டார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி. இப்ப நினைத்தால் எனக்கே மனசு கஷ்டமாத்தான் இருக்கு. மானசீகமாக அவரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் இந்தப் பதிவு.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_