Wednesday 11 February 2015

குறும்பு-16



ஒரு வாரத்துக்கு அந்தப் பேராசிரியரின் வகுப்பில் அமைதியாக இருப்போம் என்று முடிவு செய்தேன். நான்கு நாட்கள் வகுப்பு அமைதியாக போனது. வெள்ளிக் கிழமையன்று, ஒரு மாணவர் குறும்பாக ஏதோ சொன்னார். பேராசிரியர் உடனே,

“ குமார் அடங்கிட்டான். நீஆரம்பிச்சிருக்கியா?’

என்று கேட்டார். சும்மா இருந்த என்னை உசுப்பிவிட்டுவிட்டார். அவ்வளவுதான். நான் எழுந்து,

‘நான் அடங்கிட்டேன்னு யார் உங்களுக்கு சொன்னாங்க?’

என்று கேட்டேன்.

’நல்ல பிள்ளைன்னு சர்டிபிகேட் கொடுக்கிறேன். கிழிச்சு போடுறியா?’
என்று கேட்டார்.

‘கொளுத்துவேன்’ என்று சொன்னேன்.அவ்வளவுதான். அன்றும் வகுப்பு கேன்சல். மேட்னி ஷோ படம் பார்க்க போய்ட்டோம்ல.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_