குற்றம் புரியினும்
கோபம் கொள்ளினும்
குணத்தை இகழாது...
உயர்ந்தால் மகிழும்
தளர்ந்தால் தட்டிக் கொடுக்கும்...
வேண்டும்போது விட்டுக் கொடுக்கும்
வேண்டாதபோதும் கட்டிக் கொள்ளும்
எழுந்தால் மகிழும்
விழுந்தால் தாங்கும்
சிரித்தால் சிரிக்கும்
அழுதால்....
கண் துடைக்கும்
அதுதான் நட்பு...
இல்லையேல் வெறும் நடிப்பு
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_