திருவரங்கம் ஆனேன்
தேனே நீ காவிரியாய்
தினம் எனைச் சூழ்வதாலே...
திருமலையாய்
திமிராக நின்றேன்
திரவியமே நீ எனக்குத்
தேடக் கிடைத்ததாலே....
திருவல்லிக்கேணியானேன்
தீஞ்சுனை நீராக நீ
தினம் என்னில் உறைவதாலே..
சுடர்மாலும் ஆனேனே
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடியாய்
சுந்தரத் தமிழ் நீ ஆனதாலே!!
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_