Tuesday 11 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 1



ஒரு மாணவன், ஒரு மனிதன் என்று சொல்கிறோம். இலக்கணப்படி இது தவறு. அஃறிணைக்குதான் ஒரு என்று பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரு வீடு, ஒரு மாடு என்று சொல்லலாம். உயர்திணைக்கு இவ்வாறு சொல்லக் கூடாது.

மாணவன் ஒருவன், மனிதன் ஒருவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஒரு மாணவன், ஒரு நடிகை என்று சொல்வது பெருவழ்க்காக வந்துவிட்டதால், அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்று ஒரு புதினம் எழுதி வெளியிட்டார் ஜெயகாந்தன். இந்தத் தலைப்பு, “நடிகை ஒருத்தி நாடகம் பார்க்கிறாள்” என்றுதான் இருக்க வேண்டும். ஜெயகாந்தனுக்குத் தமிழ் தெரியவில்லை” என்றார் ஒரு தமிழறிஞர்.
இதற்கு ஜெயகாந்தன் சொன்ன பதில்......
எனக்குத் தமிழ் தெரிகிறதோ இல்லையோ.....தமிழுக்கு என்னைத் தெரியும்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_