Saturday 22 August 2015

அதுதான் சுதந்திரம்

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?
எவருக்கும் இல்லை
இங்கே சுதந்திரம்...

வெள்ளையரை விரட்டிவிட்டு
கொள்ளையர் கையில் நாடு..
கொள்ளையரினும்
வெள்ளையரே மேல்.

இரவிலே வந்ததால்
இருட்டிலே கிடக்கிறோம்...

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?

எழுதி முடித்து நிமிர்ந்த
என்னைப் பார்த்து
என் பேனா சொன்னது.....

இத்தனை எழுத
உனக்குக் கிடைத்ததே சுதந்திரம்
அதுதான் சுதந்திரம்

1 comment:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_