Monday 6 July 2015

மறைக்கப்பட்ட வரலாறு



அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டில் கலந்துகொள்ள, புதுக்கோட்டை மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு அழைப்பு வந்தது.இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்வதைவிடவும் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டால், இந்து மதத்தின் சிறப்பைப்பற்றி நன்றாக விளக்குவார் என்று கருதினார் மன்னர்.

கன்னியாகுமரியில் இருந்த விவேகானந்தரை சந்தித்து, சிக்காகோவில் நடக்கும் மாநாட்டுக்குப் போய் வாருங்கள் என்றார் மன்னர் பாஸ்கர சேதுபதி. சிக்காகோ போய் வரும் அளவுக்கு தன்னிடம் பண வசதி இல்லை என்றார் விவேகானந்தர். மொத்த செலவையும் நானே ஏற்கிறேன் போய் வாருங்கள் என்று சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர்.

அந்த மாநாட்டில் பேசிய மற்ற மதத்தினர், நாட்டினர் எல்லாரும், “ ladies and gentlemen" என்று பேச்சைத் தொடங்கினர். விவேகானந்தரோ, “Brothers and sisters" என்று ஆரம்பித்தார். இதற்கே கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடம் ஆனது.

வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்புகிறார் விவேகானந்தர். அப்போது, “இந்த அரிய வாய்ப்பை வழங்கியவர் மன்னர் சேதுபதி. எனவே இந்தியா திரும்பும்போது முதல் அடியை அவருடைய மண்ணில்தான் வைப்பேன்” என்றார்.
அதன்படி, இலங்கை வந்து, அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் மண்டபம் வந்து இறங்கினார். மன்னர் சேதுபதி ஆளுகைக்கு உட்பட்டது இராமேஸ்வரம்.

விவேகானந்தரை வரவேற்கச் சென்ற மன்னர் சேதுபதி, “உங்கள் முதல் அடியை என் தலையில் வைத்து இறங்க வேண்டும் என்று சொல்லிப் பணிந்தார். அவர் வேண்டுகோளை ஏற்றார் விவேகானந்தர். கடற்கரையில் இருந்து, விவேகானந்தரை ஒரு ரதத்தில் அமர வைத்து மன்னரும் சேர்ந்து இழுத்துச் சென்றார்.மண்டபத்தில் விவேகானந்தர் வந்து இறங்கியதை நினவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கல்வெட்டு இன்னமும் அங்கு உள்ளது.
விவேகானந்தருக்கு பெரும் பெருமை சேர்த்தது, சிக்காகோ மாநாட்டில் அவர் பேசிய பேச்சுதுதான். இதற்கு காரணமாக இருந்த ஒரு தமிழ் மன்னனின் இந்த மாபெரும் செயல் விவேகானந்தருடையருடைய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழகத்தில் தொடங்கி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காவிரிக்கரையில் தொடங்காமல் கங்கை கரையில் இருந்து தொடங்கி எழுதப்பட்டதால், விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் செய்த பல தியாகங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அதுபோலத்தான், மேலே சொன்னதும் மறைக்கப்பட்டுவிட்டது.
--------------------------------------------------------------------------------------------
இன்று விவேகானந்தர் நினைவு நாள் ( ஜூலை 4)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_