Saturday 4 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 1



முத்தொள்ளாயிரம் என்ற பழைய இலக்கியத்தில் ஒரு பாடல்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉம்
கூடல் இழந்தேன் கொடியன்னாய் - நீடெங்கின்
பாளையில் தேந்தொடுக்கும்பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்புடையுட் பெற்று.
-----------
பொருள்:
===========
தலைவி:
==========
காவிரி நீர் பாய்வதால் வளம் பெற்ற நாடு., தென்னம்பாளையில்கூட தேன் சிந்தும். அத்தகைய வளநாடாம் நம் சோழ நாட்டின் மன்னன் என் கனவிலே வந்தான் தோழி..... ஊடல் கொண்டேன் அவனோடு.....

தோழி:
=======
நனவிலே இல்லையென்றாலும் கனவிலே கண்டாயல்லவா? மகிழ்ச்சி தானே?

தலைவி:
========
அதுதான் சோகமடி தோழி........ ஊடல் நீட்டிக்கவும், கூடி மகிழும் முன்னே கலைந்ததே என் கனவு.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_