Wednesday 11 February 2015

குறும்பு-17


எனது அன்புக்கு உரிய அந்தப் பேராசிரியர், வெளியூரில் இருந்து விருத்தாசலம் வந்து போவார். சில நாட்களில் கல்லூரியிலேயே தங்கிவிடுவார். இரவு சாப்பிட வேண்டுமானால் அதிக தூரம் நடந்து போக வேண்டும். அப்படி அவர் தங்கும் நாட்களில் இரவு ஏழு மணிக்கு மேல கல்லூரிக்கு சென்று அவரைப் பார்ப்பேன். ’ஐயா டிபன் வாங்கிகிட்டு வரட்டுமா?’ என்று கேட்பேன். ’வாங்கிட்டு வந்து தறியா?’ எனறு கேட்பார். ’வாங்கிகிட்டு வரேன்யா’ என்பேன்.
’பஸ்டாண்ட் கிட்ட இருக்கிற ஓட்டல்லயே இட்லி வாங்கிட்டு வந்துடு போதும்’ என்று சொல்வார்.’டவுனுக்கு போய் ஐயர் கடைல வாங்கிகிட்டு வ்ரேன். அங்கதான் இட்லி நல்லா இருக்கும்’ என்று சொல்வேன்.
’ரொம்ப தூரம் நடக்கணுமே’ என்பார். ’பரவாயில். நீங்க நல்லா சாப்பிடணுங்களே’ என்று சொல்லிவிட்டு போய் வாங்கி வருவேன்.
இப்படி அடிக்கடி செய்வதுண்டு. காலை உணவு கூட வாங்கிச் செல்வேன். இதற்காகவே கொஞ்சம் முன்னதாக கல்லுரிக்கு போய்விடுவேன்.
ஒரு நாள் இரவு டிபன் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தபோது, ‘இப்படி வந்து உட்கார். உங்கிட்ட் கொஞ்சம் பேசணும்’ என்றார். ’பரவாயில்லை. நிக்கிறேன் சொல்லுங்கய்யா’ என்றேன். ’சும்மா வந்து உட்கார்’ என்று இழுத்து உட்கார வைத்து, என் தோளில் கை வைத்து,’ ’வயசானவன் ராத்திரியில் வெளியில போய் கஷ்டபட்க் கூடாதுன்னு வந்து டிபன் வாங்கி கொடுக்கிற. இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கியே..வகுப்புல மட்டும் ஏன் இப்படி ராவடி பண்ற?’ என்று கேட்டார்.
அது வேறங்கய்ய. அது பற்றி இப்ப பேச வேண்டாம்’ என்றேன்.
என்னவோ போ..உன்னை புரிஞ்சுக்கவே முடியல...நல்லா படிக்கிற அதுவரை சந்தோஷம்” என்றார்.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_