Sunday 11 January 2015

உயிர் கலந்த தமிழே



எனை இயக்கும் எரிபொருளே! என்றும்
ஏற்றம் தரும்என் வாழ்வே! எந்நாளும்
மாற்றமிலா இளமையே! என்உயிரே
மெய்யே! உயிர்மெய்யாய் என்னின்
உயிர் கலந்த தமிழே! உனையன்றி
உண்டோ ஒரு வாழ்வு எந்தனுக்கே.

1 comment:

  1. நம் உயித்தமிழ் அருமை நண்பரே,,,,
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தர அழைக்கிறேன்
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_