ஒரு கடிதத்ததில்,, “காரோட்டி” என்று அவ்வை எழுதியிருந்ததைப் படித்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வையைப் பார்த்து, “அது என்ன காரோட்டி? கா...ரோட்டி? கார் ஓட்டி என்றுதானே எழுத வேண்டும்?” என்று கேட்டார்.
அவ்வை உடனே சிரித்துக்கொண்டே, “ எனக்கென்னங்க தெரியும்? படகோட்டிதான் தெரியும் எனக்கு” என்றார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள், “ஆஹா....தமிழே... தமிழே...” என்று சொல்லி அவ்வையை அணைத்துக்கொண்டார்.
எம்ஜிஆர் நடித்த படம் படகோட்டி. அதற்கு “படகு ஓட்டி” என்று பெயர் வைக்கவில்லை. “படகோட்டி” என்றுதான் பெயர் வைத்தார்கள். அவர் நடித்த படத்தின் பெயரையே சொல்லி பதில் அளித்த அவ்வையின் திறமையை மிகவும் ரசித்தார் எம்ஜிஆர்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_