Friday 19 December 2014

எடுத்தது எங்கே -15



தமிழ்ப் பெண்களுக்கே உரிய சிறப்பு தாலாட்டுப் பாடல். நாட்டுப் புறப்பாடல்களில் தாலாட்டுப் பாடல்களை மட்டுமே தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களிலும் பல தாலாட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பாகப்பிரிவினை படத்தில் ஆண்மகன் ஒருவன் தாலாட்டு பாடுவதுபோல ஒரு காட்சி. சிவாஜிகணேசன் நடித்த படம். பட்டுக்-கோட்டை கல்யாணசுந்-தரத்தை அழைத்து தாலாட்-டுப் பாடல் எழுதச் சொன்னார் இயக்குநர் பீம்சிங். பட்டுக்-கோட்-டையாரும் வந்தார். பொது-வுடமைக் கருத்துக்கள் அனல் தெறிக்க எழுதக் கூடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருக்கு தாலாட்டுப் பாடல் எழுத வரவில்லை. உடனே அவர், மிகவும் பெருந்தன்-மையோடு, ‘இந்த தாலாட்-டுப் பாட்டெல்லாம் கண்ணதாசனுக்குதான் நல்லா எழுத வரும். அவ-ரை-யே கூப்பிட்டு எழுதச் சொல்--லுங்க’ என்று இயக்குனர் பீம்சிங்-கிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு-விட்டார்.

அப்போது, சிவாஜிக்கும் கண்ணதா-ச-னுக்-கும் பிரச்னை. தன் படத்துக்கு கவிஞர் பாட்-டெழுதக் கூடாது என்று சொல்லியிருந்தார் சிவாஜி. ஆனாலும் கண்ணதாசனை அழைத்து பாட்டெழுதச் சொன்-னார் பீம்-சிங். “அவருக்குப் பிடிக்காதே” என்று கேட்டாராம் கண்-ணத-õசன். “நீங்கள்தான் எழுது-றீங்கன்னு இப்போதைக்குத் தெரிய வேண்டாம்” என்றார் பீம்சிங். “தெரியாம எப்படிய்யா எழு-து-றது?” என்று கேட்டுவிட்டு பாட்-டெழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அந்தப் பாடல்தான்,

ஏன்பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாயோ

பாடலைப் பதிவுசெய்து சிவாஜியிடம் போட்டுக்காட்டினார்கள். ஆகா பாட்டு அருமையா வந்திருக்கு என்று பாராட்-டினார் சிவாஜி. பிறகுதான் நடந்ததைச் சொன்னார் பீம்சிங். “கவிஞன் கவிஞன்-தான்-யா” என்று பாராட்டினாராம் சிவாஜி.

கோமல்சுவாமிநாதன் எழுதிய கதை-யை ‘தண்ணீர் தண்ணீர்’ என்று படமாக எடுத்தார் கே. பாலசந்தர். இதில் ஒரு தாலாட்டுப் பாடல் வரும். வைரமுத்து எழுதிய அந்தப் பாடல்...

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து

தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே

கண்ணுறங்கு சூரியனே

இந்தப் பாடல் பின்னணி இசை எதுவும் இன்றி பி.சுசீலாவின் குரலில் அற்புதமாக ஒலிக்கும். சோகத்தைப் பிழி-யும். தான் எழுதிய பாடல்களில் தனது வாழ்க்கையில் மறக்க முடி-யாத பாடல் இது என்று சொல்வார் வைரமுத்து.

நாட்டுப்புறப் பாடலில் ஒரு தாலாட்டுப் பாடல்....

ஆத்தா நீ அழுத கண்ணீர்

ஆறாகப்பெருகி

ஆனைகுளித்தேறி

குளமாகத்தேங்கி

குதிரை குளித்தேறி

வாய்க்காலாய் ஓடி

வழிப்போக்கர் வாய் கழுவி

இஞ்சிக்கு பாஞ்சு

எலுமிச்சை வேரோடி

மஞ்சளுக்கு பாஞ்சு

மருதாணி வேரோடி

தாழைக்கு பாய்கையிலே

தளும்பியதாம் கண்ணீரும்!

இந்தப் பாடல்தான் தண்ணீர் தண்ணீர் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலுக்கு வேர் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_