Tuesday 25 November 2014

கலைஞரின் தமிழ் விளையாடல்


கவிக்கோ அப்துல் ரகுமான் என்றால் கலைஞருக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை ஒரு கவியரங்கில்,

’’வெகுமானம் எது வேண்டும் எனக்கேட்டால்
ரகுமானைக் கொடு என்பேன்’’

என்றார் கலைஞர். அப்படிப்பட்ட அப்துல் ரகுமானின் மணிவிழா நிகழ்ச்சியில் கலைஞ்ரும் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேராசிரியர் மா. நன்னன் பேசுகையில், ‘மேடையில் தயக்கம் இல்லாமல் பேசவேண்டும் என்றால், முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மேடையில் இருந்த கலைஞர் உடனே
‘’ நல்ல வேளை நாமெல்லாம் பின்னல்தான் உட்கார்ந்திருக்கோம்’
என்றாரே பார்க்கலாம். மேடையில் இருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_