Tuesday, 25 November 2014

வலியும் வாழ்வும் ...

நிறையன்றி வேறில்லை -1

இறைவன் படைப்பில்
இரண்டும் உண்டு.
இரவு - பகல்
இருள்- வெளிச்சம்
இன்பம் - துன்பம்
இப்படி...

என் வாழ்க்கையும்
இதற்கு விதிவிலக்கல்ல...

நான் மகிழந்ததை...
உள்ளம் நெகிழ்ந்ததை..
நனவோடை நினைவுகள்
என்று எழுதினேன்.
என் மறு பக்கத்தை
மனம் திறக்கும் நூல் இது.

உன் வலியை
வார்த்தைகளாக்குவாய்
அதை நாங்கள்
வாசிக்க வேண்டுமா?
என்ற கேள்வி எழலாம்.

வார்த்தைகளாக
இந்நூலில் கிடப்பது
வலிகள் மட்டுமல்ல...
படைத்தவனுக்கும்
படைப்பாளிக்கும்
நடக்கும் உரிமைப் போராட்டம்.

இந்த நூலின் வரிகளை
வாசிக்கும்போது அதில்
உங்களை நீங்கள் பார்க்கலாம்...
இறுதியில் உங்கள்
இதயம் வருடப்படுவதை உணரலாம்.

வாசியுங்கள்...
நேசிப்பீர்கள்
என்னையும்
என் எழுத்தையும்.


1 comment:

  1. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_