Wednesday, 3 December 2014
Monday, 1 December 2014
எடுத்தது எங்கே -4
சிவப்பு மல்லி படம் வெளியாகி அதில் வரும் ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் மிகவும் பிரலமானது. இதை எழுதியவர் வைரமுத்துதான். அதில்
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
என்று எழுதியிருக்கிறார்.
தமிழறிஞர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, “தேன் குடிப்பதற்குத்தான் பூவில் வண்டு அமர்கிறது. இதனால் மகரந்தச் சேர்க்கையும் நடக்கிறது. இதைப் போய் தலை துவட்டுவதாக எழுதியிருக்கிறாரே. அவ்வளவு பொருத்தமாக இல்லையே” என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான். ஆனாலும், “திரைப்பாடல்தானே... ஏதோ புதுமையாக சிந்திப்பதாக எழுதியிருக்கிறார்” என்றேன். “மரபு மாற்றப்படுகிறதே” என்றார் அவர். “வைரமுத்து எழுதியிருப்பது ஒன்றும் இலக்கியம் இல்லையே” என்றேன்.
“விரிக்காத தோகை மயில் வண்டு வந்து
மடக்காத வெள்ளை மலர் நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம் பாரில் யாரும்
ரசிக்காத இளமை நயம் பருவஞானம்”
கண்ணதாசன் எழுதிய மாங்கனி குறுங்காவியத்தில் வரும் வரிகள் இவை. கன்னிப் பெண் ஒருத்தியை இப்படி வர்ணிக்கிறார் கவியரசர்.
டிக் டிக் டிக் படத்தில் வரும் ‘இது ஒரு நிலாக்காலம்’ பாடலில்
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
என்று எழுகிறார் வைரமுத்து.
வண்டு வந்து மடக்காத வெள்ளை மலர்
என்று கண்ணதாசன் எழுதியதுதான்
வண்டு வந்த உடைக்காத பூவும் நீயே
என்று வைரமுத்து பாடலில் வந்துள்ளது.
‘சிவந்த மண்’ படத்தில் வரும் ‘பார்வை யுவராணிக் கண்ணோவியம்’ எ ன்ற பாடலில்
பாலென்று சொன்னாலும்
பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
என்று எழுதுவார் கண்ணதாசன். அவளை பால் என்றும் பழம் என்றும் வர்ணித்தால், என்னை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்டு தேன் வருத்தப்படும் என்கிறார் கவியரசர்.
இதுதான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் ‘விழியில் விழுந்து உயிரில் கலந்து’ என்ற பாடலில் உருமாற்றம் பெற்றுள்ளது.
நீ
மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
என்று எழுகிறார் வைரமுத்து.
அவள் மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால், தன்னை சூடிக்கொள்ளவில்லையே என்று ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் என்கிறார் வைரமுத்து. ‘பால், பழம், தேன்’ என்று கவியரசர் சொன்னதையே ‘மல்லிகை, ரோஜா’ என்று மாற்றிப் போடுகிறார் கவிப்பேரரசர்
(எடுத்தது வரும்)
ஊமை மனம் அழுகிறது.
நிறையன்றி வேறில்லை -3
கல்வி...அதுவும்
கல்லூரிக் கல்வி...
மனதுக்கு மகிழ்ச்சியாய்...
இதயம் கவர்ந்ததாய்...
இருக்க வேண்டும்...
இதுதான் எனக்கு மகிழ்ச்சி யென்று
மனம் சொல்லியது...
மனத்துக்குப் பிடித்ததை படித்தேன்.
பிடித்ததைப் படித்தது
பிடிக்கவில்லை பலருக்கு...
கல்வியை காசாக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டும்போது...
விருப்பத்துக்கு அங்கே
வேலையன்றிப் போனது...
விலை கிடைக்க கூடியதே
வித்தகக் கல்வி என்று கருதியதால்
விரும்பிய கல்வி யை
வீண் என்று இகழ்ந்தனர்...
காசுக்கு ஆகாத கல்வி...
வாழ்வை உயர்த்தாது என்று
வசை பாடித் தீர்த்தனர்.
கற்காமல் இருந்திருந்தால் கூட
கவுரவம் கிடைத்திருக்கும்...
காசுக்காகத கல்வி என்ற
கணிப்பு அவர்களுக்கு இருந்ததால்
கவுரவம் எனக்கு மறுக்கப்பட்டது...
இதைப் படிக்கிறான்
இவன் என்று சொல்வதைக் கூட
இழிவாகக் கருதினர்...
இறைவா...!
இழிசொல் கேட்டு
இடிந்து போகாத மனம் கொடுத்தாய்...
அழிந்து போகாமல் இருக்க
ஆக்கம் கொடுத்தாய்...
அழுத்தம் தாங்கும்
கரிதான் வைரமாகும் என்பதை என்
அகத்தினுள் விதைத்தாய்...
விதைத்தது இன்று
வீண் போகவில்லை.
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது...
வலி கொடுத்த தாக்கம்
வளர்ச்சிக்கு வித்திட்டது...
வளர்ந்தேன்....
ஆலமரமாய் அல்ல...
அருகம்புல்லாய்தான்....
அருகம் புல்லானாலும்
ஆண்டவனே உன் தோள்களில்...
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதிலேயே
அகம் மகிழ்கின்றேன்...
ஆலமரத்தின் அடியில் எதுவுமே வளராது...
ஆதலால்....
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதையே
அகம் விரும்புகிறது...
ஆண்டவனே உன்னால்
ஆசிர்வதிக்கப் பெற்றேன்.
கற்றது இன்று
கை கொடுக்கிறது...
காலத்தால் அழியா பேர் கொடுக்கிறது..
கற்றோர் அவையில்
கவுரவம் பெற்றுத் தருகிறது...
அவை கூடி போற்றுகிறது...
அகிலம் வாழ்த்துகிறது...
ஆனாலும் இறைவா....
வலி மட்டும் ஏனோ....
வழி நெடுக தொடர்கிறது...
வாழ்த்து மழையில் நனைந்தபோதும்...
வலிகள் மட்டுமே ஏனோ
வரிசை கட்டி நின்று
வாட்டம் தருகின்றன....
மறக்கத்தான் நினைக்கிறேன்...
மறக்க நினைப்பதாலேயே
மறக்காமல் நினைவுக்கு வருகிறது...
வலியின் ஆழம் வலியது அல்லவா...
அதனால்தான்....
ஊரே புகழ்கிறது....என்
ஊமை மனம் அழுகிறது.
கல்வி...அதுவும்
கல்லூரிக் கல்வி...
மனதுக்கு மகிழ்ச்சியாய்...
இதயம் கவர்ந்ததாய்...
இருக்க வேண்டும்...
இதுதான் எனக்கு மகிழ்ச்சி யென்று
மனம் சொல்லியது...
மனத்துக்குப் பிடித்ததை படித்தேன்.
பிடித்ததைப் படித்தது
பிடிக்கவில்லை பலருக்கு...
கல்வியை காசாக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டும்போது...
விருப்பத்துக்கு அங்கே
வேலையன்றிப் போனது...
விலை கிடைக்க கூடியதே
வித்தகக் கல்வி என்று கருதியதால்
விரும்பிய கல்வி யை
வீண் என்று இகழ்ந்தனர்...
காசுக்கு ஆகாத கல்வி...
வாழ்வை உயர்த்தாது என்று
வசை பாடித் தீர்த்தனர்.
கற்காமல் இருந்திருந்தால் கூட
கவுரவம் கிடைத்திருக்கும்...
காசுக்காகத கல்வி என்ற
கணிப்பு அவர்களுக்கு இருந்ததால்
கவுரவம் எனக்கு மறுக்கப்பட்டது...
இதைப் படிக்கிறான்
இவன் என்று சொல்வதைக் கூட
இழிவாகக் கருதினர்...
இறைவா...!
இழிசொல் கேட்டு
இடிந்து போகாத மனம் கொடுத்தாய்...
அழிந்து போகாமல் இருக்க
ஆக்கம் கொடுத்தாய்...
அழுத்தம் தாங்கும்
கரிதான் வைரமாகும் என்பதை என்
அகத்தினுள் விதைத்தாய்...
விதைத்தது இன்று
வீண் போகவில்லை.
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது...
வலி கொடுத்த தாக்கம்
வளர்ச்சிக்கு வித்திட்டது...
வளர்ந்தேன்....
ஆலமரமாய் அல்ல...
அருகம்புல்லாய்தான்....
அருகம் புல்லானாலும்
ஆண்டவனே உன் தோள்களில்...
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதிலேயே
அகம் மகிழ்கின்றேன்...
ஆலமரத்தின் அடியில் எதுவுமே வளராது...
ஆதலால்....
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதையே
அகம் விரும்புகிறது...
ஆண்டவனே உன்னால்
ஆசிர்வதிக்கப் பெற்றேன்.
கற்றது இன்று
கை கொடுக்கிறது...
காலத்தால் அழியா பேர் கொடுக்கிறது..
கற்றோர் அவையில்
கவுரவம் பெற்றுத் தருகிறது...
அவை கூடி போற்றுகிறது...
அகிலம் வாழ்த்துகிறது...
ஆனாலும் இறைவா....
வலி மட்டும் ஏனோ....
வழி நெடுக தொடர்கிறது...
வாழ்த்து மழையில் நனைந்தபோதும்...
வலிகள் மட்டுமே ஏனோ
வரிசை கட்டி நின்று
வாட்டம் தருகின்றன....
மறக்கத்தான் நினைக்கிறேன்...
மறக்க நினைப்பதாலேயே
மறக்காமல் நினைவுக்கு வருகிறது...
வலியின் ஆழம் வலியது அல்லவா...
அதனால்தான்....
ஊரே புகழ்கிறது....என்
ஊமை மனம் அழுகிறது.
Subscribe to:
Posts (Atom)




