Monday 17 August 2015

திருவாசகத்தில் பிறந்த இறை வாசகம்




எட்டாம் திருமுறையாம்..சைவத் திருமுறை எடுத்து ...51 திருப்பதிகங்கள் தொடுத்து...656 பாடல்கள் சேர்த்து மாணிக்கவாசகனார் கோர்த்த பாமாலை..திருவாசகம்....அத்திருவாசகம் படித்து திளைத்து ..ஊண் உருகி..சிவன் கண்டோர் பலர்...தனித்தமிழ் கண்டோர் பலர்

தென்னாடுடையவன் .....தன் பாதம் நடனமிட ..நாவினிக்கும் தமிழை...மாணிக்கனின் மணி வாய் மொழிய..இறை புகுந்து திருவிளையாடல் நடத்தி தனக்கென பெற்றுக் கொண்டான்..அன்று

இன்றும் அதே போல்..தன் முன்னோனை.....தன் ஞானகுருவை...என் ஆசான் சிந்தை புகுந்து வாசிக்க வைத்து....கண்ணீர் மல்க திகைக்கவைத்து...கருத்தாழமாய் நெஞ்சில் பதிக்க வைத்து ..நீயும் ஒரு பாமாலை கட்டி ..எனக்கு சலங்கை எடுத்துக் கொடு ....ஆடி நாளாயிற்று ..என்று சிறுபிள்ளையாய்.....தன் தமிழை தான் கேட்டுப் பெற்றுக் கொண்டான்

திருவாசகத்துக்கு உருகார்..ஒருவாசகத்துக்கும் உருகார்..என்பது மூதுரை
அவ்வுரை உரைத்த அறிஞர் பெருமக்கள் இன்று இருந்திருந்தால்.......சவமாய் கிடக்கும் .ஜீவனெல்லாம்..சிவம் சிவம் என்றே உயிர் உருகி..பிறவிக் கடந்தேறும்,.....என் ஆசானின் ஒருவாசகம் படித்து என்பார்

ஒருவாசகம் ஒன்று வந்தது.....உடுக்கையின் ஒருபுறம் தமிழ் தட்ட......மோனநிலை சிவன் மெல்ல நெற்றிக்கண் திறந்தான்...

ஒன்று பத்தாக......சடாமுடியன் இறுக்கி கூந்தல் முடிந்து சலங்கை கட்ட...போற்றி பத்து ..புகழ் பத்து...ஆட்கொள்ள பத்து...அருள் பத்து..என பத்துபத்தாய்...முத்து தமிழ் ஒலிக்க....உற்சவமடைகிறது....சிவன் ஆடும் ருத்ரவதாண்டவம்

தில்லையம்பலத்தில் பிறந்த பிள்ளையை தன் நடன இசைத்தமிழுக்கு தானே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.......பறையொலி முழங்க...பம்பை அதிர ...பொன்னம்பலமதில்..எந்தை நடம்புரிய..என .நடனமிடுடா...நற்கூத்தனே...என்று எங்கள் ஆசான் மொழிய..இன்னும் இன்னும் உற்சாகமாய்......மெய் மொழியாய் தன்னை ஆசானிடம் ஒப்புவித்து உடல் ஆளுமையாய் அவரை தன்னுடன் எடுத்து ஆடுகிறது சிவம் எனும் உற்சவம்

சன்னிதான பரம்பொருள் சலங்கை எடுத்த நொடி..என் தோழி மீராவால்...ஆரம்பிக்கப்படுகிறது..எங்கள் ஆசானின் இறைத் தமிழ் சேகரிப்பு......தனித் தமிழ் பக்கமாய்....திருவாசகத்தில்பிறந்த ஒருவாசகம் எனும் தலைப்போடு......முகநூலில்

2000க்கும் மேற்பட்ட....இறைஅன்பர்கள் வாசித்து நெகிழ்ந்து மகிழ்ந்து...50 மேற்ப்பட்ட அன்பர்கள் தங்கள் பக்கத்தில்..பகிர்ந்தனர்.......

எங்கள் ஆசானின் திருமுறைப்பாடலில்

ஒருவாசகம்...62யை....2354 அன்பர்களும்
ஒருவாசகம்....61 யை...1210 அன்பர்களும்
ஒருவாசகம்...64யை....1201 அன்பர்களும்
ஒருவாசகம்....88யை.....1097 அன்பர்களும்
ஒரு வாசகம் 87 யை..937 அன்பர்களும்......வாசித்து நேசித்து...சிவனருள் பெற்று மகிழ்ந்தனர்

எங்கள் ஆசான் வாசகத்தின் பெரும் வெற்றி..இறைபக்தி இல்லாதோரையும் தன் வசமிழுத்து வாசிக்க வைத்து,,,நிமிட நொடி சிவன் நினைத்து பூஜிக்க வைத்தது தான்.......

தொல் இலக்கிய வரலாறு பழமை கொண்ட தமிழுக்குத் தான் எத்தனை.....ஆளுமை...அடிமுடிகாணா சிவனையே..என் ஆசான் காண ..கட்டியிழுக்க வைத்துவிட்டதே...

அரசன் அம்பு ஆள் சேனை தவிர்த்து..அன்று பூசலார் கட்டிய மனக் கோவிலில்...எழுந்தருளிய சிவன்...இன்று என் ஆசான் இறைத்தமிழில் பிறந்தெழுந்து...ஆட்சிமைசெய்து ருத்ரவம் ஆடிவிட்டான்

அன்பெனும் அமைதி நிலை மறந்து அன்றாட சூழல் சிக்க உழன்று..கடைந்தெடுக்கும் கவலை வாட்ட....நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில்......ஆலயம் செல்ல வழியில்லை...ஆண்டவன் போற்ற நேரமில்லை......அமைதியாய்..தன்னுள் சிவம் காணவும் பொறுமையில்லை..எனப் ....பாவமறியாது பிறவி கடக்கும்...மானுடத்தை

தான் தேடி வந்து ...இழந்துகொண்டிருக்கும் இறை நம்பிக்கையை இறுக்கி உறுதிபடுத்த ..என் ஆசான் மொழி தேர்ந்தெடுத்து...தேடி ஆடி..ஒவ்வொரு மனிதன் வீடும் தேடி வந்துவிட்டான்...அந்த திருவிளையாடல் பெருமான்

ஒன்று தொட்டு..தொன்று தொட்டு ..தமிழ் வளர..இறை வந்து புக..சிலிர்த்த உடல் சிந்திக்க மறக்க......விழி வழி கசிந்து உருகத்தொடங்குகிறது உயிர்........கண்ணீராய்

சைவமும் வைணவமும் சத்தமின்றி...ஆதார சக்கரங்களை..ஆட்டி...ஆடவைத்துக் கொண்டே தான் இருக்கிறது இன்னும் இப் பூவுலகை.....

இதனை சத்தமில்லா சாதனையாய்...மீண்டும் ஒருமுறை....திருவிளையாடல் படுத்தி இருக்கிறது
எங்கள் ஆசானின் இறைத்தமிழ்.......

சிவன் புகுந்த தமிழே.....எம் கண் முன் வந்த குருவே,,,,என்ன வென்று சொல்வேன்.முதலாய் உம் மொழி நான் படிக்க .என்னிடம் தந்து..பின் முகநூல் பதியும் உன் கரைகாணா அன்பையும்....ஓவ்வரு பாடலின் வழியும்...நீர் ..என்னில் இறைபுகுத்தியமையையும்........

சிரம் வணங்கி....கண்கசிகிறேன் அய்யா...குருவென..உன் வழி சிவன் கண்டமைக்கு....சிவன் வழி..இப்பிறவி கடந்தேற உம்மைக் கண்டமைக்கு.......

99வது பாடலில்....நிலைபெற..நிதானமாடும் சிவனின் அனல் வெம்மை தாங்கமல்..ஒர்கணம் உயிர் அதிர்வு தெரிந்தது என்னில் என்றால்...என் பிறவி இத்தோடு அற்றுப் போகும் என்பதும் உண்மையே........

மே மாத வெளியீடாய்..எட்டாம் திருமறை தழுவி...வெளிவரும் இவ் இறைவாசகம்....உலகப் பொதுமறை போல்......அழியாப்புகழ் பெறும் நிச்சயம் என்பதில் ஐயமேதுமில்லை

சைவசித்தாந்த கழகத்தில் தனியிடம் பெற்று..ஆய்வுரையாய்...எடுத்துரைக்க....என்சிவன் அருள் புரிவான் என்றும் ஆசானே...குரு என....வணங்குகிறேன்...நின் மொழி பணிந்து....சிவன் கழல்களில்....ஓம் நமசிவாய....சிவாய நம ஓம்....!!!!!!!!!!!!!!!!!!!! —


    DR SUNDARI KATHIR

2 comments:


  1. அன்பின் அய்யா

    திருவாசகத்தில் பிறந்த இறை வாசகம்
    வளர் பிறையாய் மகிழ்ச்சியை வார்த்தெடுக்கும்
    உள்ளத்தை உயர வைக்கும் உன்னத பதிவு!
    வணங்குகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு ஐயா...

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_