Monday 17 August 2015

குறளமுதம் - 500




ஐயன் அருளால் 500
=================
தமிழன்னையின் கட்டளை ஏற்று
ஐயன் திருவள்ளுவர் திருவருளால்,
குறள் ஒவ்வொன்றையும் 
எளிய தமிழில்,
புதுக்கவிதை நடையில்
எழுதத் தொடங்கினேன்.

பணிச்சுமை
நேரமின்மை
வெளியூர் பயணம்
இத்தனைக்கும் இடையில்
எழுத வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு குறள் என
1330 குறளுக்கும் எழுதி முடிக்க
நான்கு ஆண்டுகள் ஆகும் என்று கருதியே
எழுதத் தொடங்கினேன்.

ஒரு நாளைக்கு
ஒன்று என்பது மூன்றாகி
எட்டாகி, பத்தானது.

எழுதத் தொடங்கி
ஓராண்டுகூட ஆகவில்லை.

அன்னைத் தமிழின் அருளாலும்
ஐயனின் கருணையாலும்
குறைந்த எண்ணிக்கையே ஆனாலும்
நிறைந்த மனத்துடன்
சில நட்புகள் கொடுத்த உற்சாகத்தாலும்
இன்றுடன்
திருக்குறள் கவிதைகள்

=======================
500
=========================
எழுதி முடித்துள்ளேன்.
இன்னும் இருக்கிறது 830.

இதே வேகத்தில் எழுதி முடிக்கவும்
இந்த ஆண்டிலேயே
நூலாக வெளியிடவும் விருப்பம்.
அன்னை, ஐயன் அருளும்
அன்பு நட்புகளின் ஆதரவும்
இருப்பின் அது நடக்கும்.
அருளும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்  
  • வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்



No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_