Wednesday 8 July 2015

உலக முத்த தினம்




உலக முத்த தினமாம்.
மொத்தமாக தரவா என்றேன்.
திருப்பித்தர கஷ்டம்.
தவணையில் கொடு
என்கிறாள் கள்ள்ளி.

***************************************

போதும் என்றாள்
தவித்தேன்....
திருப்பித் தருகிறாளாம்.

*****************************************

எண்ணினேன் என்றாள்
எத்தனை என்றேன்.
“உன்னையே எண்ணினேன்
என்னை மறந்து” என்கிறாள்

*****************************************

சிந்தை முழுதும் நீ
என்றாள்
சிந்தாமல் கொடுத்தேன்.
அவளும்தான்

******************************************

இனிக்குமென்று தெரியும்
இவ்வளவு இனிப்பாகவா?
கணிக்கவே இல்லை நான்

******************************************



காகிதத்தில்
கவியெழுத
பேனா வேண்டும்.

இதழில் எழுத
இதழே போதும்.


வா....
கவிதை இல்லை....
காவியம் எழுதுவோம்.

*******************************************

முகத்தில் என்பதால்
முத்தம்
முடிந்தாலும்
முடிவுரையல்ல...
முகவுரையே!!

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_