Thursday 30 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க..9



ஏழு சொற்களில் ஒரு நாடகக் காட்சி

++++++++++++++++++++++++++++++++++

புரையேறினால், யாரோ நினைக்கிறார்கள் என்று இப்போது நாம் சொல்வது உண்டு. இது போல, தும்மினால், யாரையோ நினைக்கிறோம் என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழகத்தில் இருந்தது. அதேபோல, யாரேனும் தும்மினால், அவரை வாழ்க என்று வாழ்க என்று அருகில் இருப்பவர் வாழ்த்தும் வழக்கமும் இருந்தது. குழந்தைகள் தும்மினால் 100, 108 என்று ஆயுளைச் சொல்லி வாழ்த்தும் வழக்கம் இப்போதும் உள்ளது.
இந்த இரண்டு வழக்கத்தை ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.காதலி ஊடல் கொள்ளவும், பின்னர் ஊடல் தணியவும் தும்மல் காரணமாக அமைவதாக ஒரு நாடகக் காட்சியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
அந்தக் காட்சி இதோ....
காதலன் தும்முகிறான். யாரை நினைத்தாய்....தும்முகிறாய்? என்று கேட்டு, பொய்க் கோபம் கொண்டு ஊடல் கொள்கிறாள் காதலி.அவள் ஊடலை தணிக்க முடியாமல் தவிக்கிறான் காதலன்.
மீண்டும் தும்மல் போடுகிறன். ஊடலை மறந்து, வாழ்க என காதலனை வாழ்த்துகிறாள் காதலி. ஊடல் தணிந்து, கூடி மகிழ்ந்தனர் இருவரும்.இந்த நாடகக் காட்சியை ஏழே சொற்களில் சொல்கிறார் வள்ளுவர். அந்தக் குறள் இதோ:

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.

1 comment:

  1. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.

    He has also referred the same in another kural.
    By the way, i love your blog.

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_