“மாகவிஞன் கீட்ஸ் எது வரைக்கும் வாழ்ந்தான்?” என்று கேட்டார்.
நான் உடனே, ‘சாகுற வரைக்கும் வாழ்ந்தான்’ என்றேன்,
அவர், ‘பதில் தெரிஞ்சா சொல்லு. இல்லன்னா சுழியை அடக்கிகிட்டு சும்மா இரு’ என்றார்.
நான் சொன்னேன். ’எனக்கு பதில் தெரியும். நீங்க கேட்ட கேள்வி அப்படி. அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொன்னேன்’ என்றேன்.
‘என்ன கேட்டேன்?’ என்று கேட்டார்.
‘எத்தனை வருடம் வாழ்ந்தான் என்றோ, எத்தனை வயது வரை வாழ்ந்தான் என்றோ கேட்டிருந்தால் 30 ஆண்டுகள் வாழ்ந்தான் என சொல்லியிருப்பேன். எதுவரை வாழ்ந்தான்னு நீங்க கேட்டிங்க. சாகுற்வைக்கும்தானே ஒருத்தன் வாழ முடியும். அதனால அப்படி சொன்னேன். இனிமேல் கேள்வியை சரியா கேளுங்க’ என்றேன்.
பாவம் அவர் இப்ப நினைச்சா எனக்கே வருத்தமாதான் இருக்கு
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_